பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நூல்
பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்னும் நூல்: (முனைவர் தி.நெடுஞ்செழியன்) இந்நூல் பெரியார் பற்றிய பல உண்மை கருத்துக்களை கூறியுள்ளது.சமூகநீதியற்ற பிரச்சினைகளைத் தீர்த்து சமூகநீதியை நிலைநாட்ட இந்த சமூகத்தில் பல தலைவர்கள் போராடினார்கள்.அதில் ஒரு மாபெரும் புரட்சியைச் செய்தவர் தான் தந்தை பெரியார்.சாதி, மதம், மொழி, இனம்,பெண் விடுதலை அனைத்திற்கும் பகுத்தறிவின் மூலம் சமூகநீதியைப் பெற்று தந்தார்.ஆனால் இன்றைக்கு அவர் மீது தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும்,கீழ் வெண்மணி அவதூறு, மதத்தை அவமதிக்கிறார் இப்படி பல விமர்சனங்கள் எதிரி கூட்டங்கள் திட்டமிட்டே பொய்யான தகவல்களைப் பரப்பி கொண்டிருக்கிறது.அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளியாக உண்மையை இந்த நூல் கூறுகிறது.புராண கதைகள்,இதிகாசங்களை அறவே பொய் என்று மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஏன் என்று இந்நூல் கூறுகிறது.தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி விட்டார் ஆனால் தமிழ் வளர்ச்சியடைய வேண்டும் என்பது தான் அவரின் நோக்கமாக இருந்தது அதனால் தான் அப்படி கூறினார் அதன் உண்மையையும் தமிழுக்காக அவர் செய்த தொண்டும் இந்த நூல் விவரிக்கிறது.அத...