Posts

Showing posts from September, 2025

ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா.

Image
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் பதினைந்து நாள்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறை நடைபெற்றது.அதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் "சமூக விடுதலையும் தமிழ் ஊடகங்களும்"என்ற‌ தலைப்பில் சிறப்புரையாற்றினார்.முதன் முதலில் பாரதியார் ஆரம்பித்த"இந்தியா" என்ற பத்திரிகையில் கரும்பு தோட்டத்தில் வாழ கூடிய தமிழர்களின் வாழ்க்கைப் பற்றி பேசியது.தந்தைப் பெரியார் தொடங்கிய "விடுதலை"மற்றும் 1925குடியரசு என்ற பத்திரிகை சுயமரியாதை கொள்கையும் இறைமறுப்பு, சாதி ஒடுக்குமுறைக்காகவும்,மொழி பிரச்சனை போன்ற கருத்துக்களை மக்களிடம் தைரியமாக எடுத்துரைப்பதும் , அறிஞர் அண்ணா தொடங்கிய "திராவிட நாடு"என்ற பத்திரிக்கையும் அடித்தட்டு மக்களின் சமூக விடுதலைக்காக பேசப்பட்டது. திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆரம்பித்த பத்திரிகை மூலம் தான் தமிழுக்கு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் "முரசொலி" போன்ற இதழ்களை தொடங்கினார்.பொதுவுடைமை கட்சியின் ஜீவானந்தம் "ஜனசக்தி"என்ற இதழை ...

பெண்ணின் கண்ணீரும் பேசிய சுவரும்....

........பெண் ஒருத்தி சமையலறையில் நின்று தினமும் அழுது கொண்டே இருந்தால் எதற்கு என்றால் தன்  கனவுகளையும் உணர்வையும் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் போல அதனை நினைத்து தினமும் சமையலறையில் அழுது கொண்டே இருந்தாள். முதலில் அவள் அப்பாவிடம் தன்  கனவை கூறுகிறாள். அதற்கு அப்பா அது எல்லாம் நீ எதுவும் செய்ய வேண்டாம் உன் வேலை என்ன தினமும் சமைத்து எங்களுக்கு பரிமாறுவது தான் உன் விருப்பமாகவும் உன் ஆசையாகவும் அதுதான் இருக்க வேண்டும் என்றாராம். அம்மாவிடம் சொல்ல முடியாது ஏனென்றால் அவளும் அப்படித்தான் இருக்கிறார்.உடனே தன்  கணவரிடம் கூறுகிறாள் அவர் காது கொடுத்து கூட கேட்கவில்லை.  இப்படி தினமும் நடந்து கொண்டிருந்தது. சமையலறையில் அழுவது ஒரு நாள் திடீரென அதிகமாக  இருந்தது. சமையலறை சுவருக்கு முன் தன் தலையை அதன் மீது ஒட்டிக்கொண்ட அடித்து வேகமாக கத்தி அழுகிறாள் உடனே சுவரு பேசத் தொடங்கியது. எப்படி பேச தொடங்கியது என்றால் தோழி  உன் கனவு என்ன என்று கேட்டவுடன் அழுது கொண்டிருந்த கண்களில் சிறிது ஆனந்தம் கலந்த சிரிப்புடன் கண்ணீர் வந்ததாம்.அந்தப் பெண் சொல்கிறாள் என் கனவு என்னவென்றால்  ...

அண்ணாந்து பார் என்ற புத்தகம் என் பார்வையில்...

அண்ணாந்து பார்:         (என்: சொக்கன்)        அறிஞர் அண்ணா பற்றி எனக்கு தவறான புரிதல் இருந்தது.அண்ணா அப்படி என்ன செய்து விட்டார்.ஆனால் என் புரிதலை முற்றிலும் மாற்றியது இந்த புத்தகம். மிகவும் எளிமையான நடையிலும் படிக்கும் போது சோர்வு இல்லாமல் விறுவிறுப்பாக இருந்தது. அண்ணாவிடம் நான் பார்த்து வியந்தது தன் குருவான பெரியார் மீது மனஸ்தாபம் இருந்தாலும் அவரைப் பற்றி ஒரு மேடையிலும் கூட தவறாக அவரைப் பற்றி பேசவில்லை அவரின் குணம் எனக்கு பிடித்தது.அண்ணாவின் ஆட்சியில் மக்களுக்காகவே உழைத்தார் என்று 100 சதவிகிதம் சொல்ல முடியும்.எளிமையான தோற்றத்தை இறுதி வரையிலும் மாற்றவே இல்லை.ஹிந்தி ஒழிப்பு,தீவிர மதுவிலக்கு,கைக் ரிக்க்ஷா ஒழிப்பு, இப்படி என்னற்றவை.அவரின் எழுத்து பணியும் நான்‌பார்த்து வியந்தது.இதழ், சிறுகதை, நாடகம், திரைப்படம் வசனம்,இப்படி அனைத்து துறைகளிலும் தன் எழுத்தை நிலை நாட்டினார்.முக்கியமாக தன் உடன் உள்ளவர்களை வளர்த்து விடுவதில் அண்ணா போல் யாரும் இல்லை.அண்ணா மீது மதிப்பு கூடிவிட்டது.அண்ணாவின் ஆட்சி இரண்டு ஆண்டு தான் ‌இதில் இவ்வளவு செய்ய முடியுமா என்று ஆச்சரிப...