ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் மூலம் சென்னை பயணம்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் தமிழ் உயராய்வு மையம் நடத்தும் பதினைந்து நாள்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையில் 26ஆளுமைகள் பயிற்சி அளித்தார்கள்.இதில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.அதனைத் தொடர்ந்து சென்னைக்கு இரண்டு நாள்கள் அச்சு ஊடகத்தையும் காட்சி ஊடகத்தையும் நேரில் காண அழைத்துச் சென்றார்கள். கல்லூரியிலிருந்து 08.10 2025 அன்று இரவு 10 மணிக்கு மேல் பயணம் தொடங்கி 09.10.2025 அன்று சென்னை சென்றடைந்தோம். இதில் முதலாவதாக பெரியார் திடலில் தி.க துணைச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரைச் சந்தித்தோம்.அவர் மாணவர்களை அழைத்துச் சென்று பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை விவரித்த பிறகு பெரியார் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டோம்.இதில் என் கருத்து என்னவென்றால் பெரியார் மீது இன்றளவும் விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் சமூக மாற்றத்திற்காக இறுதி வரைப் போராடியவர்.சாதி, மதம்,ஆண் பெண் வேறுபாடு, பார்ப்பனிய ஆதிக்கம், இந்த அடக்குமுறைகளை எல்லாம் தன் இறுதி வரைப் போராடி சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்.இதற்...