Posts

Showing posts from January, 2025

சமூகத்தின் பார்வை

நம் நாட்டில் எத்தனையோ நிகழ்வுகள் மாறி உள்ளன. ஆனால் சில இடங்களில் இன்னும் மாற்றம் இல்லாமல் பல நிகழ்வுகள் உள்ளன. அதில் ஆண் பெண் வேறுபாடு, ஏழை பணக்காரன், இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் மாறாமல் அப்படியே நிகழ்கிறது. அதில் ஆண் பெண் பாகுபாட்டில் ஆண் பிள்ளை வீட்டிற்குத் தலைவனாகவும் பெண் பிள்ளையை அடுத்த வீட்டிற்கு வேலை செய்பவளாகவும் பார்க்கின்றார்கள். உரிமை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் ஆனால் அதுவும் கிடைக்கவில்லை ஆணுக்கு ஒரு நியாயம் பெண் என்றால் இப்படித்தான் கிடக்க வேண்டும் என்பதும், மக்களின் பார்வை எப்பொழுது மாறப் போகிறதோ தெரியவில்லை? ஆண் உடலில் வலிமை என்றால் பெண் மன உறுதியின் வலிமையானவர் ஆணுக்கு நிகராக பெண் இருக்கின்றாள் தானே! பெண்ணுக்குப் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த உடனயே சுதந்திரமாகத் திரிய வேண்டிய கால்களில் கால் விலங்கு போட்டுக் கட்டிப் போடுகிறார்கள். அவள் மனதில் இருக்கின்ற ஆசைகளையும் கனவுகளையும் ஒரு கடுகு அளவிற்குக் கூட பார்க்க மாட்டேங்கிறார்கள். புத்தகப் பையையும் கனவுகளையும் சுமக்க வேண்டிய வயதில் வயிற்றில் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டு அவதிப்படுகிறார்கள். பணம் இருந்தால் அவர்களுக்க...